- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 24.01.2021
அன்புடையீர், வணக்கம்!
zoom வழி நடைபெறும் அன்னை பூபதி கல்வி நடவடிக்கைகள் நேரடியாக பாடசாலையில் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்ற கேள்வி நம்மவரில் பலருக்கு உள்ளது. குரோனா சூழ்நிலை பேர்கன் நகரில் ஓரளவுக்கு சீராக இருப்பதால், எதிர்வரும் vinterferieவின்பின் பாடசாலையை ஆரம்பிக்கலாம் என்ற முடிவில் நாம் உள்ளோம். ஆனாலும், இன்றைய சிக்கலான Oslo குரோனா சூழ்நிலை Bergenஇலும் வருமிடத்து எமது முடிவில் மாற்றம் ஏற்படலாம். எப்படியிருப்பினும், நேரடியாக பாடசாலை ஆரம்பித்தல் சம்பந்தமான மேலதிக விபரங்களை மாசிமாத நடுப்பகுதியில் தங்களுக்கு அறியத்தருகிறோம். அதுவரை அனைவரும் கவனமாயிருந்து, நலம் பேணுவோம்!
நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 05.01.2021
அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
குரோனா சூழ்நிலை கடந்த சில நாட்களாய் மோசமடைந்திருப்பதால், நாம் வரும் வாரங்களில் தொடர்ந்து zoomஇலேயே வகுப்புகளை நடாத்த வேண்டியுள்ளது. எதிர்வரும் 8ந்திகதி தொடக்கம் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படும்.
நன்றி!
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 05.11.20
அனைவர்க்கும் அன்பு வணக்கம்!
கடந்த சில நாட்களாக பேர்கன் நகரில் Covid 19 பரவுகை அதிகமாகியிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அகில நோர்வே ரீதியிலும் நோய் பரவுகை அதிகரித்துவருவதால், அரசுமட்டத்திலும், பேர்கன் நகரசபைமட்டத்திலும் இப்பரவுகையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சில இறுக்கமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கையாக, நாமும் இந்த சனிதொடக்கம் (7-11-20) அடுத்துவரும்வாரங்களில் அன்னை பூபதி கல்விக்கூடத்தின் கல்வி நடவடிக்கைகளை zoom தளத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்.
வகுப்பு ஆசிரியர்கள் viber குழுக்களூடாக உங்களுடன் தொடர்பு கொண்டு, நேரவிபரங்களைஅறியத் தருவார்கள்.
அத்துடன், நிலைமை கருதி ஓவிய, உறுப்பெழுத்து, பேச்சுப் போட்டிகளையும் அடுத்த வருடத்திற்கு பிற்போட்டுள்ளோம். தயவு செய்து எல்லோரும் அரச சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி, குரோனா நோய்ப்பரவுகையைக் கட்டப்படுத்துவதில் எம் பங்களிப்பைச் செவ்வனே செய்வோம்.
நலம் காக்க! நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
04-11-20
- Details
- அறிவித்தல்
பேச்சுப்போட்டி/ஓவியப்போட்டி 2020 விதிமுறைகள்
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளுக்குரிய விதிமுறைகளை நீங்கள் இங்கே பார்வையிடலாம் .
பேச்சுப்போட்டி/ஓவியப்போட்டி 2020 விதிமுறைகள்
- Details
- அறிவித்தல்
பேச்சுப்போட்டி 2020
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டிகளுக்குரிய பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் பேச்சுப்போட்டி 2020
- Details
- அறிவித்தல்
பெற்றோர்கள் கவனத்திற்கு
பெற்றோர்களுக்கு வணக்கம்!
நாங்கள் எல்லோரும் அறிகின்றபடி பேர்கனிலும் மற்றைய இடங்களிலும் தொற்று கூடிக்கொண்டே செல்கிறது. அதனால் நாம் இன்னும் அவதானமாக இருப்போம்.
பாடசாலையில் ஆசிரியர்கள்/ பொறுப்பாளர்கள் 2 மீற்றர் இடைவெளியைப் பேணும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். அதேபோல் பெற்றோர்களும் 2 மீற்றர் இடைவெளியைத் தொடர்ந்து பேணுங்கள்.
இயலுமானவரை பாடசாலை வளாகத்தினுள் உட்பிரவேசிப்பதைத் தவிர்க்கவும்.
பாடசாலை முடிந்தவுடன் நீங்கள் பிள்ளைகளைக் கூட்டவரும்போது, வாகனத் தரிப்பிடத்தில் சில சிரமங்கள் இருப்பதை நாம் அறிவோம். இவ்விடத்தில் எல்லோரும் ஒரு புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இறுதியாக, karantene/ isolering விதிமுறைகளைச் சரியான முறையில் பேணும்படியும் நினைவூட்டுகிறோம். மேலதிக விவரங்களுக்கு, ஏற்கனவே அறிவித்திருந்த " பெற்றோர்களுக்கான அறிவித்தலும் அறிவுறுத்தலும்" என்ற தகவலைப் பார்வையிடவும்.
நன்றி!
சுகந்தன் (அன்னை பூபதி, பேர்கன்)
- Details
- அறிவித்தல்
பெற்றோர்களுக்கான அறிவித்தலும் அறிவுறுத்தலும்!
- முதற்கட்டமாக தமிழ் வகுப்புகள் மட்டும் மணி 09:30 - 11:45 வரை நடைபெறும் (உயர்தர வகுப்புகளுக்கு தனிப்பட்ட தகவல் கொடுக்கப்படும் .
- ஆசிரியர்கள், பாடசாலையின் பொறுப்பாளர்கள் மற்றும் 4-6 வயது மாணவர்களின் பெற்றறோர்களுக்கு மட்டும் வாகனத் தரிப்பிடத்திற்கு (parkering) அனுமதியுண்டு.
- பாடசாலை வளாகத்தில் கூட்டமாக நிற்பதைத் தவிர்க்கவும்.
- பெற்றோர்கள் வகுப்பறையினுள்ளேயோ அல்லது பாடசாலையோர கட்டிடத்தினுள்ளேயோ செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது .(விதிவிலக்கு 4, 5 வயது மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியரின் அனுமதியுடன் உட்செல்லலாம்.
- மணி 09:30 ற்கு முன்னதாகவே அனைத்து மாணவர்களும் தங்கள் வகுப்பறையின் முற்பகுதியில் ஆசிரியரைச் சந்தித்து கைகளைச் சுத்தம் செய்த பின்னர் உட்செல்வார்கள்.
- Details
- அறிவித்தல்
இலையுதிர்கால விடுமுறை 10.10.2020
எதிர்வரும் சனிக்கிழமை 10/10-20 இலையுதிர்கால விடுமுறை. அன்று பாடசாலை நடைபெற மாட்டாது.
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 17.09.20
மகிழ்வடைகிறோம். எதிர்வரும் சனிக்கிழமை 19/9, தமிழ் வகுப்புகள் ஆரம்பமாகின்றன.
ஓர் இக்கட்டான சூழ்நிலையில் நாம் இப்பாடசாலையாண்டை ஆரம்பிப்பதால் அனைத்து பெற்றோர்களின்
ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
எதிர்வரும் சனிக்கிழமை (19.09.2020) 8, 9, 10 மற்றும் உயர்தர வகுப்புகள் மட்டுமே பாடசாலையில்
நடைபெறும். மற்றைய அனைத்து வகுப்புகளும் Zoom -வழியாகவே நடைபெறும். மாறான அறிவித்தல்கள்
வராத பட்சத்தில் அடுத்த சனிக்கிழமை (26.09.2020) அனைத்து வகுப்புகளும் பாடசாலைக் கட்டடங்களில்
நடைபெறும். தயவுசெய்து அனைவரும் உங்கள் வகுப்புகளின் viber -குழுக்களை தொடர்ந்து பார்வையிடவும்.
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் (19.08.20)
ஆரம்பமாகும் நேரம் வகுப்புகள் ரீதியாக பின்னர் அறியத்தரப்படும்.
மற்றும், பாடசாலைக் கட்டடங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒரு சில நடைமுறைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்த பின்னர், விரைவில் பாடசாலையில் சந்திப்போம் என நம்புகிறோம்.