- Details
- அறிவித்தல்
“ உலகத்தாய்மொழி தினத்தை முன்னிட்டு அன்னை பூபதி கலைக்கூட பேர்கன் வளாகத்தால் வழங்கப்பட்ட நிகழ்ச்சி”
“ உலகத்தாய்மொழி தினத்தை முன்னிட்டு அன்னை பூபதி கலைக்கூட பேர்கன் வளாகத்தால் வழங்கப்பட்ட நிகழ்ச்சி”
- Details
- அறிவித்தல்
பேச்சுப்போட்டி 2021
பேச்சுப்போட்டி 2021
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டிகளுக்குரிய பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பேச்சுப்போட்டி/ஓவியப்போட்டி 2021 விதிமுறைகள்
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளுக்குரிய விதிமுறைகளை நீங்கள் இங்கே பார்வையிடலாம் .
பேச்சுப்போட்டி/ஓவியப்போட்டி 2021 விதிமுறைகள்
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 03.10.21
அன்புடையீர், கடந்த 16 மாதங்களாக நடைமுறையிலிருந்த நாடளாவிய குரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் முற்றாகத் தளர்த்தப்பட்டுள்ளமை மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. எனவே, அன்னை பூபதி கலைக்கூடமும் எமது வழமையான கல்வி நடவடிக்கைகளை மீண்டும் முழுமையாக நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன்படி, எதிர்வரும் 23.10.21 தொடக்கம், அறிவியல்கல்வி வகுப்புகளும் பகல் 12 முதல் 13 மணிவரை வாராவாரம் சனிக்கிழமைகளில் மீண்டும் நடாத்தவுள்ளோம்.
பெற்றோர்களினால் நடாத்தப்படும் உணவுச்சாலையும் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் நடாத்தப்படவுள்ளது என்பதையும மகிழ்வுடன் அறியத்தருகிறோம்!
பெற்றோர்களை பாடசாலை நடவடிக்கைகளில் முன்பு போல் நேரடியாக சமூகமளித்து, கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி!😊
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 18.08.21
அனைவர்க்கும் அன்பு வணக்கம்!
கோடைகால விடுமுறை உங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கும என நம்புகிறோம். புதிய கல்வியாண்டில் புதிய பாட நூல்களுடன், பாடத்திட்டங்களுடன், நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் அனைவரையும் நேரில் காண மிக ஆவலாயுள்ளோம்.
வருகின்ற சனிக்கிழமை 21.8.21, காலை 10 மணிக்கு எமது அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் தனது கல்வியல் நடவடிக்கைகளை, நேரடியாக Aurdalslia பாடசாலையில் ஆரம்பிக்கிறது என்பதை மிக்க மகிழ்வுடன் அறியத்தருகிறோம்!
ஆசிரியர் கூட்டம் காரணமாக, பாடசாலை இந்த சனிக்கிழமை 11.30 மணிக்கு நிறைவடையும்!
Videregående skole மாணவர்களையும் காலை 10 மணிக்கே சமூகமளிக்குமாறு வேண்டுகிறோம்.
மாணவர்கள் தமது தமிழ் பாடநூல்களை வாங்குவதற்கு ஆயத்தமாக வருமாறு பெற்றோரை வேண்டிக்கொள்கிறோம்!
குரோனா பரவுகைக்கான ஆபத்தை நினவில் கொண்டு, அதற்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்!
நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 24.01.2021
அன்புடையீர், வணக்கம்!
zoom வழி நடைபெறும் அன்னை பூபதி கல்வி நடவடிக்கைகள் நேரடியாக பாடசாலையில் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்ற கேள்வி நம்மவரில் பலருக்கு உள்ளது. குரோனா சூழ்நிலை பேர்கன் நகரில் ஓரளவுக்கு சீராக இருப்பதால், எதிர்வரும் vinterferieவின்பின் பாடசாலையை ஆரம்பிக்கலாம் என்ற முடிவில் நாம் உள்ளோம். ஆனாலும், இன்றைய சிக்கலான Oslo குரோனா சூழ்நிலை Bergenஇலும் வருமிடத்து எமது முடிவில் மாற்றம் ஏற்படலாம். எப்படியிருப்பினும், நேரடியாக பாடசாலை ஆரம்பித்தல் சம்பந்தமான மேலதிக விபரங்களை மாசிமாத நடுப்பகுதியில் தங்களுக்கு அறியத்தருகிறோம். அதுவரை அனைவரும் கவனமாயிருந்து, நலம் பேணுவோம்!
நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 05.01.2021
அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
குரோனா சூழ்நிலை கடந்த சில நாட்களாய் மோசமடைந்திருப்பதால், நாம் வரும் வாரங்களில் தொடர்ந்து zoomஇலேயே வகுப்புகளை நடாத்த வேண்டியுள்ளது. எதிர்வரும் 8ந்திகதி தொடக்கம் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படும்.
நன்றி!
- Details
- அறிவித்தல்
அறிவித்தல் 05.11.20
அனைவர்க்கும் அன்பு வணக்கம்!
கடந்த சில நாட்களாக பேர்கன் நகரில் Covid 19 பரவுகை அதிகமாகியிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அகில நோர்வே ரீதியிலும் நோய் பரவுகை அதிகரித்துவருவதால், அரசுமட்டத்திலும், பேர்கன் நகரசபைமட்டத்திலும் இப்பரவுகையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சில இறுக்கமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கையாக, நாமும் இந்த சனிதொடக்கம் (7-11-20) அடுத்துவரும்வாரங்களில் அன்னை பூபதி கல்விக்கூடத்தின் கல்வி நடவடிக்கைகளை zoom தளத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்.
வகுப்பு ஆசிரியர்கள் viber குழுக்களூடாக உங்களுடன் தொடர்பு கொண்டு, நேரவிபரங்களைஅறியத் தருவார்கள்.
அத்துடன், நிலைமை கருதி ஓவிய, உறுப்பெழுத்து, பேச்சுப் போட்டிகளையும் அடுத்த வருடத்திற்கு பிற்போட்டுள்ளோம். தயவு செய்து எல்லோரும் அரச சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி, குரோனா நோய்ப்பரவுகையைக் கட்டப்படுத்துவதில் எம் பங்களிப்பைச் செவ்வனே செய்வோம்.
நலம் காக்க! நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
04-11-20
- Details
- அறிவித்தல்
பேச்சுப்போட்டி/ஓவியப்போட்டி 2020 விதிமுறைகள்
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளுக்குரிய விதிமுறைகளை நீங்கள் இங்கே பார்வையிடலாம் .
பேச்சுப்போட்டி/ஓவியப்போட்டி 2020 விதிமுறைகள்
- Details
- அறிவித்தல்
பேச்சுப்போட்டி 2020
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டிகளுக்குரிய பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் பேச்சுப்போட்டி 2020
- Details
- அறிவித்தல்
பெற்றோர்கள் கவனத்திற்கு
பெற்றோர்களுக்கு வணக்கம்!
நாங்கள் எல்லோரும் அறிகின்றபடி பேர்கனிலும் மற்றைய இடங்களிலும் தொற்று கூடிக்கொண்டே செல்கிறது. அதனால் நாம் இன்னும் அவதானமாக இருப்போம்.
பாடசாலையில் ஆசிரியர்கள்/ பொறுப்பாளர்கள் 2 மீற்றர் இடைவெளியைப் பேணும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். அதேபோல் பெற்றோர்களும் 2 மீற்றர் இடைவெளியைத் தொடர்ந்து பேணுங்கள்.
இயலுமானவரை பாடசாலை வளாகத்தினுள் உட்பிரவேசிப்பதைத் தவிர்க்கவும்.
பாடசாலை முடிந்தவுடன் நீங்கள் பிள்ளைகளைக் கூட்டவரும்போது, வாகனத் தரிப்பிடத்தில் சில சிரமங்கள் இருப்பதை நாம் அறிவோம். இவ்விடத்தில் எல்லோரும் ஒரு புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இறுதியாக, karantene/ isolering விதிமுறைகளைச் சரியான முறையில் பேணும்படியும் நினைவூட்டுகிறோம். மேலதிக விவரங்களுக்கு, ஏற்கனவே அறிவித்திருந்த " பெற்றோர்களுக்கான அறிவித்தலும் அறிவுறுத்தலும்" என்ற தகவலைப் பார்வையிடவும்.
நன்றி!
சுகந்தன் (அன்னை பூபதி, பேர்கன்)